Paristamil Navigation Paristamil advert login

வடகொரிய வீரர்களை சிறைப்பிடித்த உக்ரைன்...! ஜெலென்ஸ்கி அறிவிப்பு

வடகொரிய வீரர்களை சிறைப்பிடித்த உக்ரைன்...! ஜெலென்ஸ்கி  அறிவிப்பு

12 தை 2025 ஞாயிறு 09:49 | பார்வைகள் : 5076


உக்ரைன் ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்து வருகின்றது.

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் சமமான அளவு ஆயுத உதவிகளும், போர் உதவிகளும் கிடைக்கப்பெறுகின்றது.

ரஷ்ய பிராந்தியத்திற்குள் இரண்டு உக்ரைனிய துருப்புகளை உக்ரைன் சிறைப்பிடித்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த இரண்டு வடகொரிய வீரர்களை சிறைப்பிடித்து இருப்பதாக சனிக்கிழமை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

கடந்த இலையுதிர் காலத்தில் போரில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வடகொரியத் துருப்புகளை உயிருடன் கைப்பற்றியதாக உக்ரைன் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபரில் ரஷ்யாவுடன் இணைந்து வடகொரிய ராணுவத்தினர் போரில் ஈடுபட்டதாக உக்ரைன் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகள் முன்பு தெரிவித்திருந்தனர்.

அறிக்கைகளின் படி, வடகொரியாவில் இருந்து கிட்டத்தட்ட 10,000 அல்லது அதற்கு மேற்பட்ட வட கொரிய வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்கள் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும், "போர்கைதிகளனைவரையும் போல, இந்த இரண்டு வடகொரிய வீரர்களுக்கும் தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது" என்றும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.

சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களுடன் பேச செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்