தான்சானியாவில் பரவி வரும் புதிய வைரஸ் - 8 பேர் பலி

17 தை 2025 வெள்ளி 15:25 | பார்வைகள் : 5572
தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் (Marburg virus) என சந்தேகிக்கப்படும் ஒரு தொற்றுநோய் பரவி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த தொற்று நோயால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
மார்பர்க் வைரஸ் (Marburg virus) தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மார்பர்க் வைரஸ் (Marburg virus) நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் மூலமாகவோ மக்களிடையே பரவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025