புற்றுநோய்க்கான மருந்துகள் மீளப்பெறப்படுகின்றன!!

21 தை 2025 செவ்வாய் 10:00 | பார்வைகள் : 5775
புற்றுநோயாளர்களுக்கு வழங்கப்படும் ”Pomalidomide” மருந்துகள் மீளப்பெறப்படுவதாக மருந்துகளின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் (L'Agence nationale de sécurité du médicament - ANSM) அறிவித்துள்ளது.
ஜனவரி 20, நேற்று திங்கட்கிழமை இந்த அறிவித்தலை ANSM அறிவித்துள்ளது. சிவப்பு - வெள்ளை நிறங்கொண்ட Pomalidomide வில்லைகளில் இறுதியாக விநியோகிக்கப்பட்ட தொகுதியில் உற்பத்தி குறைபாடு இருப்பதாகவும், லியோன் மாவட்ட ஆய்வுகூடம் இதனை அடையாளம் கண்டு, அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1, 2, 3 மற்றும் 4 மில்லிகிராம் அளவுடைய அனைத்து தொகுதி வில்லைகளையும் மருந்தகங்களில் கொடுத்து, புதிய வில்லைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, பெற்றுக்கொண்ட புதிய வில்லைகளை மருந்துச்சீட்டின் அறிவுத்தலின் படி பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3