பிரித்தானியா நோக்கி கடற்பயணம்.. 59 அகதிகள் மீட்பு!!

22 தை 2025 புதன் 17:16 | பார்வைகள் : 11337
பா-து-கலே மாவட்ட கடற்பகுதியில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த 59 அகதிகள் எல்லை பாதுகாப்பு ஜொந்தாமினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள baie de Somme எனும் விரிகுடாப்பகுதியூடான காற்று நிரப்பரப்பட்ட ஆபத்தான படகு ஒன்றில் அவர்கள் நேற்று ஜனவரி 21, செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அப்படகினை சுற்றிவளைத்த ஜொந்தாமினர், அகதிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
அவர்கள் Boulogne-sur-Mer பகுதி கடற்கரைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களை வழிநடத்தி அழைத்துச் சென்ற ஒருவரை ஜொந்தாமினர் கைது செய்துள்ளனர்.
இவ்வருட ஆரம்பம் முதல் நாள் ஒன்றுக்கு 600 வரையான அகதிகள் இதுபோன்ற கடற்பயணத்தில் ஈடுபடுவதாகவும், காலநிலை மிகவும் மோசமாக காணப்படுவதால் உயிரிழப்பு ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாகவும், மிக தீவிரமான கண்காணிப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1