Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

தங்கள் 10 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர்.

தங்கள் 10 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர்.

25 தை 2025 சனி 18:52 | பார்வைகள் : 17464


தன் மகளை தன் இரண்டாம் தார கணவனுடன் சேர்ந்து, சிறுமி CM2 படிக்கும் 10 வயதில் இருந்து,  பாலியல் பலாத்காரம் செய்து வந்ததுடன், இன்று தடைசெய்யப்பட்ட இணையத்தளமான Coco.fr மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும் வந்துள்ளனர். இந்த இருவருக்கும் Côtes-d'Armor குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று 17 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதில் 12  ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துளது.

பாலியல் இணையத்திற்கு அடிமையான அந்த தம்பதிகள் தாய், மகள் இணையத்தின் மூலம் வரும் நபர்கள் எல்லோரும் இணைந்து இருப்பதை படமாக்கி Coco.fr இணையத்தில் இணைத்து விளம்பர படுத்தியும் வாடிக்கையாளர்களை கவர்ந்தும் வந்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஐந்து வருடங்களாக ஒவ்வொரு நாளும் அவளைப் பலாத்காரம் செய்ததாக வளர்ப்புத் தந்தை தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார், அதேவேளை மகள் கருத்தரித்து விடாமல் தான் மாத்திரைகளை வழங்கியதாக தாய் தன் குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

18 வயதிற்கு முன்னர் தனக்கு நடக்கின்ற குற்றங்களை வழக்காக தொடர மகளுக்கு முடியாமல் இருந்த நிலையிலேயே. இவ்வளவு நாளும் இந்த வழக்கு பதியப்படவில்லை என தெரிவித்த சட்டத்தரணி, இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு மேலும் அதிகப்படியான சிறைத் தண்டனை கிடைத்திருக்க வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
(சிறுவியின் எதிர்காலம் குறித்து எந்தவிதமான பெயர்களோ இடங்களோ செய்தியில் குறிப்பிடப்படவில்லை)

வர்த்தக‌ விளம்பரங்கள்