கஜகஸ்தானில் கோர விமான விபத்து – 38 பேர் பலி

27 மார்கழி 2024 வெள்ளி 15:25 | பார்வைகள் : 3405
கஜகஸ்தான் விமான விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கஜகஸ்தானில் 69 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்துள்னர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் அகாட்டு நகரில் அவசரமாக தரையிறங்க முற்பட்டவேளை தீப்பிடித்தது.
ரஸ்யாவிற்கு பயணித்துக்கொண்டிருந்த விமானம் பனி காரணமாக திருப்பிவிடப்பட்டவேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.