Paristamil Navigation Paristamil advert login

திடீரென அதிகரித்த வெப்பம்!!

திடீரென அதிகரித்த வெப்பம்!!

5 தை 2025 ஞாயிறு 09:55 | பார்வைகள் : 12562


பரிசில் நிலவிய கடும் குளிர் திடீரென விலகியுள்ளது. நேற்று சனிக்கிழமை -1°C இல் இருந்த காலநிலை, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 13°C இற்கு மாறியுள்ளது.

இந்த திடீர் மாற்றம் நிக அரிதான ஒன்றாகும். கடந்த இரண்டுநாட்களாக பெரும் பனிமூட்டம் நிலவியது. நேற்று பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், இன்று காலை அந்த எச்சரிக்கை அனைத்தும் நீக்கப்பட்டு வானம் புத்துயிர் பெற்றது.

இன்று காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.