கசகஸ்தானில் கோர விபத்து - 12 பேர் காயம்

5 தை 2025 ஞாயிறு 15:41 | பார்வைகள் : 5435
கசகஸ்தானில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த நாட்டின் அதிகாரிகள், விபத்து காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
போக்குவரத்தை மீண்டும் இயங்குவதற்கான முயற்சிகள் தற்போது எடுக்கப்படுகின்றன.
இந்த விபத்து அஸ்தானாவுடன் தொடர்புடைய பெட்ரோபாவ் பிராந்தகத்தில் நடைபெற்றது.
இந்த விபத்து கடும் பனிப்புயலுக்காக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், காலநிலை காரணமாக அரசு முன்கூட்டியே வீதி போக்குவரத்திற்கு எச்சரிக்கைகள் விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.