Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கடவுச்சீட்டு வரிசைக்கு விரைவில் தீர்வு

இலங்கையில் கடவுச்சீட்டு வரிசைக்கு விரைவில் தீர்வு

12 மாசி 2025 புதன் 11:33 | பார்வைகள் : 219


எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும்  தமிழ் - சிங்கள  புத்தாண்டுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை குடிமக்களுக்கு நிலவும் கடுமையான கடவுச்சீட்டு பற்றாக்குறைக்கு முந்தைய ஆட்சிகளின் தவறான நிர்வாகமே காரணம் என்றும் கூறியுள்ளார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின்  மூத்த அதிகாரி ஒருவர்  செவ்வாய்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

கடவுச்சீட்டு வரிசைகள் ஒரு மாதத்திற்குள் அனைத்து வரிசைகளும் அழிக்கப்படும்.

அடுத்த வாரத்திற்குள் 24 மணி நேர சேவை தொடங்கப்படுவதால், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இரவும் பகலும் உழைக்க உறுதிபூண்டுள்ளனர்.

கடவுச்சீட்டு வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையில் உள்ள அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.

தகுதிவாய்ந்த அதிகாரியாக இருப்பதால், நாங்கள் அவ்வாறு செய்ய உறுதியளிப்போம். 

இருப்பினும், இந்தப் பிரச்சினை கடந்த கால அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டது.

மீதமுள்ள ஊழியர்களை மட்டுமே கொண்டு 24 மணி நேர சேவையை வழங்குவது மிகவும் கடினமான பணி என்று கூறிய அந்த அதிகாரி, பல நாட்கள் வரிசையில் காத்திருப்பதன் மூலம் பொதுமக்கள் அனுபவிக்கும் சிரமங்களுக்கு இது பொருந்தாது என்றார். 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்