Paristamil Navigation Paristamil advert login

கிரீஸின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் சபாநாயகர் தேர்வு...!

கிரீஸின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் சபாநாயகர் தேர்வு...!

13 மாசி 2025 வியாழன் 06:01 | பார்வைகள் : 390


கிரீஸின் நாடாளுமன்றம் அதன் முன்னாள் சபாநாயகர் கான்ஸ்டன்டைன் டசௌலாஸை (Constantine Tassoulas) புதன்கிழமை (12) நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது.

2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு கொடிய ரயில் விபத்துக்கு நீதி கோரி கடந்த மாதம் நாடாளுமன்றத்திற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்களை அவரை பரிந்துரைக்கும் முடிவு கோபப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகராக டசௌலாஸ் இருந்தபோது, கிரேக்கத்தின் மிக மோசமான ரயில் பேரழிவுக்கான எந்தவொரு அரசியல் பொறுப்பையும் சட்டமன்ற உறுப்பினர்கள் விசாரிக்கத் தவறிவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நீதித்துறை விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. கிரேக்க சட்டத்தின் கீழ் அரசியல்வாதிகளை விசாரிக்கக்கூடிய ஒரே அமைப்பு நாடாளுமன்றம் மட்டுமே.

66 வயதான டசோலாஸ் 2000 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னர் கிரேக்கத்தின் கலாச்சார அமைச்சராகவும், துணைப் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 160 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றார்.

கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியான கேடரினா சகெல்லரோபௌலூவின் ஐந்தாண்டு பதவிக்காலம் மார்ச் மாதத்தில் முடிவடைகிறது.

அவருக்குப் பின்னர் டசோலாஸ் ஜனாதிபதியாக பதவியேற்பார்.

 



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்