Paristamil Navigation Paristamil advert login

மீன் பிடிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மீன் பிடிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

15 மாசி 2025 சனி 18:41 | பார்வைகள் : 1424


குளத்தில் மீன் பிடிப்பதை கண்டித்து மிருகவதைக்கு எதிரான அமைப்பு ஒன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பரிஸ் நகரசபைக்கு முன்பாக கூடிய சிலர், இந்த ஆர்ப்பாட்டதை முன்னெடுத்தனர். அவர்கள் பரிசில் உள்ள Bois de Boulogne குளத்தில் மீன் பிடிப்பதை கண்டித்ததுடன், 'விலங்குகளுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் குளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்!' எனவும் கோரிக்கை வைத்தனர்.

பரிசில் வசிப்பவர்களில் 63% சதவீதமானவர்கள் மீன் பிடிப்பதை எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். Paz எனும் தொண்டுநிறுவனத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்