உக்ரேனுக்கு ஆதரவாக ஈஃபிள் - உக்ரேன் - ரஷ்ய மோதல்.. மூன்றாண்டுகள் நிறைவு.. !!
.jpeg)
24 மாசி 2025 திங்கள் 12:00 | பார்வைகள் : 3180
ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையே தாக்குதல் ஆரம்பித்து இன்று பெப்ரவரி 24 ஆம் திகதியுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை அடுத்து ஈஃபிள் கோபுரம் இன்று மாலை உக்ரேனுக்கு ஆதரவாக தனது அந்நாட்டு கொடியின் வண்ணத்தில் மிளிர உள்ளது.
மாலை 7 மணி அளவில் ஈஃபிள் கோபுரத்தில் இந்த உக்ரேன் கொடி காட்சிப்படுத்தப்பட உள்ளதாக பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி அன்று ரஷ்யா உக்ரேன் தாக்குதல் ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரேனில் நிரந்தரமாக அமைதியை ஏற்படுத்தும் முகமாகவும் - கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது.