80 நாட்களாக Gaîté Lyrique அரங்கை முற்றுகையிட்டுள்ள அகதிகள்!!

28 மாசி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 633
பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் உள்ள கலாசார மண்டபமான Gaîté Lyrique அரங்கினை கடந்த 80 நாட்களாக அகதிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து 440 அகதிகள் குறித்த அரங்கினை முற்றுகையிட்டு அங்கேயே தங்கிவருகின்றனர். இதனால் அரங்கில் நிகழ்வுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல தடவைகள் காவல்துறையினர் தலையிட்டு அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தும் அது பலனளிக்கவில்லை.
அதேவேளை, அகதிகளுக்கிடயே மோதல் வெடிப்பதாகவும், ஒருவருக்கொருவர் தாக்கிக்கொள்ளுவதாகவும், பெப்ரவரி 21 ஆம் திகதி அங்கு தீ பரவியிருந்தததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அகதிகளை வெளியேற்ற Gaîté Lyrique நிர்வாகம் நேற்று பெப்ரவரி 27, வியாழக்கிழமை காவல்துறையினரின் உதவியை கோரியுள்ளது.