வெள்ள அனர்த்தம் தொடர்கிறது.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
.jpeg)
28 மாசி 2025 வெள்ளி 09:00 | பார்வைகள் : 313
கடந்த இரண்டுநாட்களாக தெற்கு பிரான்சில் பெய்துவரும் மழை.. இன்று பெப்ரவரி 28, வெள்ளிக்கிழமையும் தொடர்கிறது. இன்று 13 மாவட்டங்களுக்கு வெள்ள அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Aisne, Calvados, Charente-Maritime, Eure, Eure-et-Loir, Gironde, Ille-et-Vilaine, Loir-et-Cher, Maine-et-Loire, Mayenne, Oise, Sarthe மற்றும் Somme ஆகிய மாவட்டங்களில் இன்று நண்பகலின் பின்னர் மழை பெய்யும் எனவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
அதேவேளை, Haute-Savoie (74) மாவட்டத்துக்கு பனிச்சரிவு காரணமாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.