Paristamil Navigation Paristamil advert login

கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!

1 பங்குனி 2025 சனி 09:35 | பார்வைகள் : 138


சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு பிறகு இங்கிலாந்து வெள்ளை பந்து கிரிக்கெட் கேப்டன் பதவியை ஜோஸ் பட்லர் ராஜினாமா செய்துள்ளார்.

வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளான கேப்டன் பதவியிலிருந்து ஜோஸ் பட்லர் பதவி விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறும் போட்டியே அவரது தலைமையிலான கடைசி போட்டியாக இருக்கும்.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயான் மோர்கனிடம் இருந்து கேப்டன் பதவியை ஏற்ற ஜோஸ் பட்லர், அதே ஆண்டு டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

தற்போது கராச்சியில் நடைபெறும் குரூப் பி போட்டிக்கு பிறகு அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜோஸ் பட்லர் தனது முடிவை அறிவித்தார். "நான் இங்கிலாந்து கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது எனக்கும் அணிக்கும் சரியான முடிவு என்று நம்புகிறேன்.

புதிய கேப்டன் பாஸ் (பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம்) உடன் இணைந்து அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்