நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்

29 தை 2025 புதன் 08:24 | பார்வைகள் : 5572
நியூசிலாந்தை நள்ளிரவில் நிலநடுக்கம் உலுக்கிய நிலையில், மக்கள் நிற்கக்கூட முடியாமல் தடுமாறியதாகத் தெரிவித்துள்ளார்கள்.
நியூசிலாந்தை, உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு முன் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ள அந்த நிலநடுக்கத்தை அந்தப் பகுதியில் வாழும் 1.2 மில்லியன் மக்கள் உணர்ந்திருக்கக்கூடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் உருவான மையப்பகுதிக்கு அருகில் வாழும் மக்களால், நிற்கக்கூட முடியாத அளவுக்கு அந்த நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1