காஸா போர்நிறுத்தம்.. பிரெஞ்சு பணயக்கைதி விடுதலை!!
1 மாசி 2025 சனி 17:00 | பார்வைகள் : 1312
காஸாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இன்று காலை மொத்தமாக 3 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களில் பிரான்ஸ்-இஸ்ரேல் இரட்டைக் குடியுரிமை கொண்ட Ofer Kalderon எனும் நபர் இன்று காலை விடுவிக்கப்பட்டார். யுத்தம் ஆரம்பித்த முதலாவது நாள் பிடிக்கப்பட்டிருந்த அவர்கள், 484 நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
பாலஸ்தீன சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.