மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 மாசி 2025 சனி 16:15 | பார்வைகள் : 3410
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை நாளை தினம் நடைபெறும் .
அதன்படி நாளை காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய கிரியைகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 10 மணிக்கு அஞ்சலி உரைகள் அவரது இல்லத்தில் இடம்பெற்று, பின்னர் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சகலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார்.