ஜெயிலர் ரிலீஸான அதே தேதியில் வெளியாகும் ‘கூலி’?

2 மாசி 2025 ஞாயிறு 15:08 | பார்வைகள் : 4397
கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத்தின் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை ஆகிய பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
2025 மார்ச் மாதத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படம் கோடையில் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டது. பின்னர் இப்படம் 2025 தீபாவளிக்கு வெளியாகும் எனவும் தகவல் கசிந்தது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தை 2025 ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஜெயிலர் திரைப்படம் வெளியான அதே தேதியில் கூலி திரைப்படமும் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1