Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்

இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம் ஆரம்பம்

3 மாசி 2025 திங்கள் 13:57 | பார்வைகள் : 3644


அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘Govpay’ திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பூர்வாங்க நிகழ்வு பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்