இலங்கையில் வழமைக்கு திரும்பிய 80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம்
![இலங்கையில் வழமைக்கு திரும்பிய 80 வீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம்](ptmin/uploads/news/SriLanka_renu_image_2bfa29b4b8.jpg)
9 மாசி 2025 ஞாயிறு 13:14 | பார்வைகள் : 380
இலங்கையில் சுமார் 80 வீதமான பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மீதமுள்ள பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க தேவையான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் 3 மின்னுற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்துள்ளன.
திடீர் மின்விநியோகத் தடை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
நீர்மின்னுற்பத்தியின் ஊடாக தொடர்ச்சியாக மின் விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என எதிர்பார்ப்பதாக வலுசக்தி அமைச்சர், பொறியியலாளர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
![](/images/engadapodiyalxy.jpg)