Paristamil Navigation Paristamil advert login

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும் ஆரம்பமாகும் பயணிகள் கப்பல் சேவை

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும் ஆரம்பமாகும் பயணிகள் கப்பல் சேவை

10 மாசி 2025 திங்கள் 14:43 | பார்வைகள் : 250


காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது, காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய்க்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.



Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்