Paristamil Navigation Paristamil advert login

ராம நவமி விழாவில் அயோத்தியில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ராம நவமி விழாவில் அயோத்தியில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்பு:பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

17 பங்குனி 2025 திங்கள் 08:41 | பார்வைகள் : 382


வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ள ராம நவமி விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ள நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

ராம நவமி, ராமரின் பிறந்தநாளை கொண்டாடும் ஹிந்து மதத்தின் மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்றாகும். இவ்விழாவில் கலந்து கொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு வருகை தருவார்கள்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநில டி.ஜி.பி. குமார், ராம நவமிக்கு முன்னதாக, அயோத்தி ராமர் கோவிலில் பாதுகாப்பு மதிப்பாய்வை மேற்கொண்டார், இதன் மூலம் பண்டிகையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தார்.

கொண்டாட்டங்களின் போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களையும் தடுக்கும் வகையில் திட்டங்களை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் விவாதித்தனர்.

மேலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கோவில் சுற்றுவட்டார பகுதியை கண்காணிக்க பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்