Paristamil Navigation Paristamil advert login

RCBயின் புதிய கேப்டனை வரவேற்ற கோஹ்லி

RCBயின் புதிய கேப்டனை வரவேற்ற கோஹ்லி

19 பங்குனி 2025 புதன் 09:39 | பார்வைகள் : 452


உங்களது முழு அன்பையும் கொடுங்கள் என RCB அணியின் புதிய தலைவர் ரஜத் படிதரை குறிப்பிட்டு விராட் கோஹ்லி பேசியுள்ளார்.

ஐபிஎல் 2025 சீசனில் விளையாட உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய தலைவராக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது அறிமுக நிகழ்வில் விராட் கோஹ்லி (Virat Kohli) மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார்.

பின்னர் பேசிய கோஹ்லி, "ரஜத் அமைதியான மற்றும் நல்ல அணுகுமுறையைக் கொண்ட ஒரு அற்புதமான திறமைசாலி. புதிய கேப்டனுக்குப் பின்னால் நின்று, சீசன் முழுவதும் அவரை ஆதரியுங்கள்.

அடுத்து வரவிருக்கும் வீரர், நீண்ட காலத்திற்கு உங்களை வழிநடத்துவார். எனவே அவருக்கு உங்களால் முடிந்த அனைத்து அன்பையும் கொடுங்கள். அவர் ஒரு அற்புதமான திறமைசாலி.

அவர் ஒரு சிறந்த வீரர். அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் தனது தோள்களில் ஒரு சிறந்த தலைமையை வைத்திருக்கிறார்.

மேலும் அவர் இந்த அற்புதமான அணிக்காக சிறப்பாக செயல்பட்டு அணியை முன்னோக்கி அழைத்துச் செல்வார். தேவையான அனைத்தையும் அவர் பெற்றுள்ளார்" என தெரிவித்துள்ளார்.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்