புயல் : இரு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
.jpg)
20 பங்குனி 2025 வியாழன் 18:55 | பார்வைகள் : 1820
மணிக்கு 120 கி.மீ வேகத்தில் புயல் வீசும் என தெரிவிக்கப்பட்டு இரு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை அவதானிப்பு மையம் இன்று மார்ச் 20 வியாழக்கிழமை இரவு 9 மணி முதல் நாளை மார்ச் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tarn மற்றும் Haute-Garonne ஆகிய இரு மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும் எனவும், மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகம் வரை புயல் வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.