Paristamil Navigation Paristamil advert login

புயல் : ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

புயல் : ஏழு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

21 பங்குனி 2025 வெள்ளி 07:17 | பார்வைகள் : 3960


பிரான்சின் ஏழு மாவட்டங்களுக்கு புயல், கடற் கொந்தளிப்பு போன்ற அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 21, இன்று வெள்ளிக்கிழமை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புயல்!!

Haute-Garonne, Tarn, Hérault, Gard மற்றும் Bouches-du-Rhône ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு புயல் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகபட்சமாக மணிக்கு 120 கி,மீ வேகத்தில் புயல் வீசும் என தெரிவிக்கப்படுகிறது.

vagues-submersion!!

கடற்கொந்தளிப்பு காரணமாக Pyrénées-Orientales, Aude மற்றும் Hérault ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் Hérault மாவட்டத்துக்கு இரண்டு புயல் மற்றும் கடற்கொந்தளிப்பு என இரு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்