Paristamil Navigation Paristamil advert login

அப்பாவியாக இருக்க வேண்டாம்: ரஷ்ய வணிகத் தலைவர்களை எச்சரித்த புடின்

அப்பாவியாக இருக்க வேண்டாம்: ரஷ்ய வணிகத் தலைவர்களை எச்சரித்த புடின்

21 பங்குனி 2025 வெள்ளி 13:57 | பார்வைகள் : 1371


பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டாலும் எங்களுக்கு எப்படி அழுத்தம் கொடுப்பது என்பதை அமெரிக்கா கண்டுபிடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையில், எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களை 30 நாட்கள் இடைநிறுத்த விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், ரஷ்ய வணிகத் தலைவர்களுடனான கூட்டத்தில் புடின் பேசிய விடயங்களை பத்திரிகையாளர் ஃபரிடா ருஸ்டமோவா வெளியிட்டுள்ளார்.

அதில், உக்ரைனுடன் விரைவான சமாதான ஒப்பந்தத்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று புடின் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டாலும் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் எப்படியும் நமக்கு அழுத்தம் கொடுப்பது என்பதைக் கண்டுபிடிக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.

ருஸ்டமோவா மற்றொரு அறிக்கையில், "தற்போது நடைபெற்று வரும் செயல்முறைகளில் எத்தனை பேர் மற்றும் நலம்விரும்பிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளுமாறும், அப்பாவியாக இருக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி எங்களுக்கு அறிவுறுத்தினார்" என்று ஒருவர் கூறியதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஆனால், புடினின் இந்த கருத்துக்கள் ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடல்களுக்கு முன்பாக வந்ததாகக் கூறப்படுகிறது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்