கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து - 35 பேர் படுகாயம
 
                    22 பங்குனி 2025 சனி 11:57 | பார்வைகள் : 1866
கொழும்பு – கண்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.
வரகாபொல தும்மலதெனிய பகுதியில் இன்று சனிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கண்டி – தெஹிவளை மற்றும் கல்முனை – கொழும்பு ஆகிய இரண்டு பஸ்களே கொழும்புக்கும் கண்டிக்கும் இடையில் பயணித்துள்ளன.
விபத்தின் பின்னர் குறித்த வீதியில் மேலும் பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் இதன் காரணமாக கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan