ஈஃபிள் கோபுரத்தில் தீ! - 300 பேர் வெளியேற்றம்!!

23 பங்குனி 2025 ஞாயிறு 12:20 | பார்வைகள் : 1582
மின் ஒழுக்கு காரணமாக ஈஃபிள் கோபுரத்தி தீ பரவியது. முன்னெச்சரிக்கை காரணமாக 300 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
மார்ச் 22, நேற்று சனிக்கிழமை இரவு 8.50 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றது. கோபுரத்தின் இரண்டாவது தளத்தில் திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டது. அதில் இருந்து தீ பரவ, உடனடியாக அங்கிருந்த தீ அணைப்பான் மூலமாக தீ அணைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் படிக்கட்டுக்கான விளக்குகள் பழுதடைந்தது.
பின்னர் முன்னெச்சரிக்கை காரணமாக இரண்டாவது தளத்தில் இருந்த 300 பேர் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் எவ்வித தடையும் இன்று இன்று மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை கோபுரம் வழமை போல் திறக்கப்பட்டது.