பிரித்தானிய வானில் தோன்றிய மர்ம ஒளி

25 பங்குனி 2025 செவ்வாய் 18:06 | பார்வைகள் : 459
பிரித்தானியாவின் வானத்தில் மர்மமான சூழல் வடிவிலான ஒளி மிளிர்ந்ததுபலரும் அதனை UFO (வேற்றுகிரக விண்கலம்) என நினைத்தனர்.
மாண்ட்செஸ்டர், டெர்பிஷைர், யார்க்ஷையர் உள்ளிட்ட வடக்கு பிரதேசங்களில் இந்த மர்ம ஒளி காணப்பட்டது.
இதுகுறித்து வினோதக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. "இது வானில் மெதுவாக நகர்ந்துகொண்டே மறைந்தது" என காட்சியைக் கண்டவர்கள் பகிர்ந்தனர்.
"இது என்னது? என்று நாங்கள் பார்ப்பதற்குள் இரண்டு நிமிடங்களில் மறைந்துவிட்டது" என ஒருவர் எழுதினார்.
இந்த மர்ம ஒளி அதிசய விண்கலம் அல்ல என்பதற்கான விளக்கம் விரைவில் வெளிவந்தது.
இது SpaceX Falcon 9 ரொக்கெட் ஏவுதலால் உருவானது. அமெரிக்க தேசிய ரகசிய சேவை (NROL-69) திட்டத்தின் கீழ், கேப் கானாவெரலில் இருந்து (அமெரிக்கா) புறப்பட்ட இந்த ரொக்கெட், தேவையற்ற எரிபொருளை (excess fuel) வெளியேற்றியது.
வெளிவந்த இந்த எரிபொருள் உலக சுற்றுச்சூழலில் உறைந்து, சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் வானத்தில் சுழல் வடிவிலான ஒளிவட்டம் தோன்றியது. இதேபோன்று 2023-ல் SpaceX ரொக்கெட் ஏவுதலின் போது அமெரிக்காவிலும் காணப்பட்டது.
"இது ஒரு 'Rocket Ice Cloud' எனப்படும் நிகழ்வு, ரொக்கெட் வெளியேற்றும் உறைந்த நீராவி சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் இவ்வாறு தோன்றுகிறது" என்று Met Office அறிவித்துள்ளது.