EuroMillions - முதன்முறையாக €243 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகை!!

26 பங்குனி 2025 புதன் 11:03 | பார்வைகள் : 4702
EuroMillions அதிஷ்ட்டலாபச்ச்சீட்டிழுப்பின் வரலாற்றில் இல்லாத அளவு பெரும் தொகையை வெள்ள இந்தவார வெள்ளிக்கிழமை சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
வெற்றித்தொகையாக €243 மில்லியன் யூரோக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28, வெள்ளிக்கிழமை இரவு இந்த சீட்டிழுப்பு இடம்பெற உள்ளது. ஐரோப்பிய சீட்டிழுப்பு வரலாற்றிலேயே வெல்லப்பட்ட அதிகபட்ச தொகையாக இருப்பது €240 மில்லியன் ஒஸ்ரியாவில் 2023 ஆம் ஆண்டு வெல்லப்பட்டாகும். அதேபோல் EuroMillions நிறுவனத்தின் சீட்டிழுப்பில் வெல்லப்பட்ட அதிகபட்ச தொகை €217 மில்லியன் யூரோக்களாகும்.
இந்த அத்தனை தொகைகளையும் முறியடிக்கும் விதமாக €243 மில்லியன் யூரோக்கள் எனும் பெரும் தொகை வெற்றிக்காக காத்திருக்கிறது.