Rassemblement national கட்சியில் இணைந்த 10,000 பேர்!
.jpeg)
1 சித்திரை 2025 செவ்வாய் 18:44 | பார்வைகள் : 3526
மரீன் லு பென்னின் தண்டனை அறிவிப்புக்கு பின்னர் 10,000 புதிய அங்கத்தவர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரீன் லு பென்னுக்கு ஐந்து ஆண்டுகால தகுதியின்மை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து அவருக்கான ஆதரவுகள் அதிகரித்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை மரீன் லு பென்னுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் Place Vauban பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
அதேவேளை, இந்த தண்டனைக்கு பிறகு Rassemblement national கட்சியில் புதிய அங்கத்தவர்களாக 10,0000 பேர் இணைந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.