Paristamil Navigation Paristamil advert login

யாழில் சண்டித்தனம் செய்த பிரித்தானியா வாழ் இலங்கையருக்கு நேர்ந்த கதி

யாழில் சண்டித்தனம் செய்த பிரித்தானியா வாழ் இலங்கையருக்கு நேர்ந்த கதி

6 பங்குனி 2025 வியாழன் 13:56 | பார்வைகள் : 824


பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக 14 நாட்கள் விளக்க மறியில் வைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் சமூக வலைத்தளத்தில் நேரலையில் காணொளிகளை வெளியிட்டவாறு , பலவேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் ரிக் ரொக் தளத்தில் நேரலை வீடியோக்களை பதிவிட்ட வாறு பல்வேறு தரப்பினருடனும் முரண்பட்டு வந்துள்ளார். 

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் , வரணி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்று , வெளிநாட்டு பணத்தினை உள்ளூர் பெறுமதிக்கு மாற்ற வங்கியில் கால தாமதம் ஏற்பட்டதாக நேரலையில் வீடியோ பதிவிட்டவாறு , வங்கியின் முகாமையாளர் , உத்தியோகஸ்தர்கள் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் என அனைவருடனும் முரண்பட்டுக்கொண்டார்.

அதுபோன்று சில வாரங்களுக்கு முன்னர் கொடிகாம பொலிஸ் நிலையத்தினுள் சென்று , பொலிஸார் முறைப்பாடுகளை பதிய கால தாமதம் செய்வதாக நேரலை வீடியோக்களை வெளியிட்டு , பொலிஸாருடனும் முரண்பட்டுக்கொண்டார். 

இந்நிலையில் கடந்த வாரம் வரணி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல மெய்வல்லுனர் போட்டி ஒன்றுக்கு சென்று , மாணவிகள் , அவர்களின் அனுமதியின்றி , ரிக் ரொக் தளத்தில் நேரலையில் காணொளிகளை பதிவிட்ட போது , பாடசாலையில் கடமையில் நின்ற போலீஸார் அதிபரின் அனுமதியின்றி மாணவிகளை காணொளி எடுக்க முடியாது என அறிவுறுத்திய போது , பொலிஸ் உத்தியோகஸ்தர்களுடனும் முரண்பட்டு , அவற்றினையும் காணொளிகளாக வெளியிட்டார். 

குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து , பொலிஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில்  குறித்த நபரை கைது செய்த கொடிகாம பொலிஸார் விசாரணைகளின் பின்னர் அந்நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்