Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய சொத்துக்களில் இருந்து உக்ரேனுக்கு €30.6 பில்லியன்... உச்சிமாநாட்டில் தீர்மானம்!!

ரஷ்ய சொத்துக்களில் இருந்து உக்ரேனுக்கு €30.6 பில்லியன்... உச்சிமாநாட்டில் தீர்மானம்!!

7 பங்குனி 2025 வெள்ளி 10:00 | பார்வைகள் : 1663


நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உச்சிமாநாட்டின் முடிவில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) தரப்பில் €30.6 பில்லியன் யூரோக்கள் உக்ரேனுக்கு வழங்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார்.இந்த பணம் ஐரோப்பாவில் உள்ள ரஷ்ய அசையாத சொத்துக்களில் இருந்து எடுத்து வழங்கப்பட உள்ளதாக மக்ரோன் தெரிவித்தார்.

ரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் ஐரோப்பாவின் பல நாடுகளில் உள்ள ரஷ்யாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருந்தமை அறிந்ததே. அவற்றின் பெறுமதை ரஷ்ய யுத்தத்துக்கு எதிராக பயன்படுத்தும் திட்டங்களை ஐரோப்பா மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகவே உக்ரேனுக்கு மிக அவசியமான ஆயுதங்களை வழங்க இந்த €30.6 பில்லியன் யூரோக்கள் இந்த 2025 ஆம் ஆண்டில் வழங்கப்படும் என மக்ரோன் அறிவித்தார்.

அதேவேளை, ஐரோப்பா கண்டத்தின் எல்லைகளை பாதுகாக்க 800 பில்லியன் யூரோக்களை செலவிட தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஆணையம் (Commission européenne) திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்