கடுமையான புயற்காற்று - மக்களிற்கு எச்சரிக்கை!!

9 பங்குனி 2025 ஞாயிறு 09:53 | பார்வைகள் : 858
காலநிலை வெப்பமாக இருந்ததைத் தொடர்ந்து கடுமையான புயற்காற்று வீசும் அபாயம் உள்ளதென வானிலை மையம் எச்சரித்துள்ளது.
முக்கியமாக பிரான்சின் தெற்குப் பகுதியின் மாவட்டங்களிற்கு கடுமையான எச்சரிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. மக்களை அத்தியாவசியத் தேவைகள் அன்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக Haute-Garonne, Hérault, Tarn ஆகிய மாவட்டங்களிற்கு இந்தக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மற்றைய பகுதிளிலும், இல்-து-பிரான்சிற்கு அருகாமையிலும் இந்தப் புயற்காற்று வீசுவதால், அதன் பாதிப்பு இல்-து-பிரான்சிலும் இருக்கும் எனவும் அஞ்சப்படுகின்றது.