அணு ஆயுத பாதுகாப்பு தேவை என போலந்து வலியுறுத்தல்

14 பங்குனி 2025 வெள்ளி 08:31 | பார்வைகள் : 393
ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான போர் சுமார் 3 வருடங்களாக நீடித்து வரும் நிலையில் தங்கள் நாட்டிற்கும் அணு ஆயுத பாதுகாப்பு தேவை என 'நேட்டோ' நாடுகளில் ஒன்றான போலந்து வலியுறுத்தியுள்ளது.
யுக்ரைன், பெலாரஸ் மற்றும் ரஷ்யாவின் கலினின்கிராட் ஆகியவற்றுடன் போலந்து தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தங்கள் நாட்டில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த வேண்டும் என அமெரிக்காவுக்கு போலந்து ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தற்போது பிரான்ஸ் மட்டுமே அணு ஆயுதங்களை கொண்டுள்ளது.
சமீபத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், ரஷ்யாவின் அச்சுறுத்தல்களிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாக்க பிரான்ஸ் நாட்டின் அணு ஆயுத சக்தியை பயன்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த வாரம் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.