Paristamil Navigation Paristamil advert login

பனிப்பொழிவு : மூன்று மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!

பனிப்பொழிவு : மூன்று மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!

15 பங்குனி 2025 சனி 06:22 | பார்வைகள் : 6027


பனிப்பொழிவு காரணமாக இன்று மார்ச் 15, சனிக்கிழமை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Allier, Creuse மற்றும் Puy-de-Dôme ஆகிய மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு பதிவாகும் எனவும், வீதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10 தொடக்கம் 15 செ.மீ வரை பனிப்பொழிவு இடம்பெறும் என Météo France தெரிவித்துள்ளது.

அதேவேளை, மேலும் 28 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாக  குறைந்தபட்ச எச்சரிக்கையான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (புகைப்படத்தில் பார்க்க; )

வர்த்தக‌ விளம்பரங்கள்