பனிப்பொழிவு : மூன்று மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை!!

15 பங்குனி 2025 சனி 06:22 | பார்வைகள் : 10528
பனிப்பொழிவு காரணமாக இன்று மார்ச் 15, சனிக்கிழமை நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Allier, Creuse மற்றும் Puy-de-Dôme ஆகிய மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு பதிவாகும் எனவும், வீதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 தொடக்கம் 15 செ.மீ வரை பனிப்பொழிவு இடம்பெறும் என Météo France தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேலும் 28 மாவட்டங்களுக்கு பனிப்பொழிவு காரணமாக குறைந்தபட்ச எச்சரிக்கையான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (புகைப்படத்தில் பார்க்க; )
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025