Paristamil Navigation Paristamil advert login

ரணிலை கைது செய்ய வேண்டுமென அழுத்தம்!

ரணிலை கைது செய்ய வேண்டுமென அழுத்தம்!

16 சித்திரை 2025 புதன் 13:38 | பார்வைகள் : 10510


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஏன் கைது செய்யவில்லை என முன்னிலை சோசலிசக் கட்சி , அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.

பத்தலந்த  சித்திரவதை கூடத்தில் சித்திரவதைகளுக்கு ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்டிருப்பதை தான் கண்ணால் கண்டதாக அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளித்துள்ளதாக அக்கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

ஒரு ஸ்டிக்கரை ஒட்டியதற்காக ஒரு இளைஞர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், தற்போது புகார் வந்துள்ள நிலையில் ரணிலை ஏன் கைது செய்ய முடியாது என்றும் துமிந்த நாகமுவ கேள்வி எழுப்பியுள்ளார்.