காங்கிரசால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும்; ராகுல் பேச்சு

17 சித்திரை 2025 வியாழன் 07:16 | பார்வைகள் : 245
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்,'' என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தின் மோடாசா நகரில் , காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: தற்போது நடப்பது அரசியல் ரீதியிலான போராட்டம் மட்டும் அல்ல. இது பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்றால், காங்கிரசால் மட்டுமே முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.
பா.ஜ.,வையும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பையும் தோற்கடிக்க வேண்டும் என்றால், அது குஜராத் வழியாக தான் முடியும். நமது கட்சி குஜராத்தில் தான் துவங்கப்பட்டது. இம்மாநிலம் மஹாத்மா காந்தி மற்றும் சர்தர் படேல் என்ற மாபெரும் தலைவர்களை இம்மாநிலம் அளித்தது. ஆனால், நீண்ட காலமாக குஜராத்தில் நாம் சோர்வடைந்து விட்டோம். ஆனால், எதுவும் கடினம் கிடையாது. கட்சியில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். இவ்வாறு ராகுல் பேசினார்.