Aulnay-sous-Bois : வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு ரைஃபிள் துப்பாக்கிகள்.. பெண் கைது!!

17 சித்திரை 2025 வியாழன் 17:34 | பார்வைகள் : 3230
Aulnay-sous-Bois நகரில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு ரைஃபிள் வகை துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டின் மொட்டைமாடி பகுதியில் அதனை பதுக்கி வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று ஏப்ரல் 16, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் காவல்துறையினர் எச்சரிக்கப்பட்டனர். பெண் ஒருவர் வீட்டின் மொட்டைமாடியில் துப்பாக்கியுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை அடுத்து சம்பவம் இடம்பெற்ற Rue Docteur-Schweitzer வீதியில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு 59 வயதுடைய பெண் ஒருவர் மொட்டைமாடியில் மறைத்துவைத்திருந்த துப்பாக்கிகளை மீட்டனர்.
அப்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025