குற்றவாளிகளைக் கட்டாயம் கண்டு பிடிப்போம்!!

18 சித்திரை 2025 வெள்ளி 12:37 | பார்வைகள் : 914
தொடர்ச்சியாக இந்த வாரம் பிரான்சின் சிறைச்சாலைகள் மீது பாரிய தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
பெருமளவான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன் சிறைச்சாலைகளிலும் பெரிதும் சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலிற்கான குற்றவாளிகளை மிக விரைவில் பிடிப்போம் என பரிசின் தலைக் காவற்துறைய அதிகாரி (préfet de police de Paris) லொரோன் நூனெஸ் (Laurent Nunez) தெரிவித்துள்ளார்.
எந்த விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி நாம் அவர்களைக் கண்டுபிடிப்போம் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.