அகதித்தஞ்சக் கோரிக்கையைக் கடுமையாக்க ஆதரவு!! அகதித்தஞ்சம் மறுக்கப்படும் நாடுகள்!!

19 சித்திரை 2025 சனி 05:03 | பார்வைகள் : 6959
அகதித்தஞ்சக் கோரிக்கையில் கட்டுப்பாடுகளையும் இறுக்கமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பற்றி CSA நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது.
இதற்கு ஆதரவாக, அதாவது இறுக்கமான நடைமுறைகளைக் கொண்டு வந்து மிக விரைவாக முடிவுகளை எடுக்க 61 சதவீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் ஐரோப்பிய ஆணையம் ஏழு நாடுகளிற்கு அகதித்தஞ்சம் கோரும் தகுதி இல்லை எனப் பட்டியலிட்டுள்ளது.
கொசோவோ, பங்காளதேஷ், இந்தியா, கொலம்பியா, எகிப்து, மொரோக்கோ மற்றும் துனிசியா ஆகிய நாடுகளிற்கே அகதித்தஞ்சம் வழங்கவேண்டாம் என ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ளது.