நடு கடலில் இருந்து 25 அகதிகள் மீட்பு!!

19 சித்திரை 2025 சனி 14:15 | பார்வைகள் : 1768
இரு படகுகளில் பயணித்த 25 அகதிகள் நடுக்கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை நள்ளிரவின் போது 9 அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்த நிலையில், Gravelines கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.
பின்னர், அதிகாலை (சனிக்கிழமை) Équihen-Plage பகுதியில் 16 அகதிகளுடன் படகு ஒன்று பயணித்த நிலையில், அவர்களது படகில் மூழ்க ஆரம்பித்துள்ளது. காற்று நிரப்பப்பட்ட குறித்த படகில் இருந்து காற்று வெளியேறி, மூழ்க ஆரம்பித்துள்ளது. பல அகதிகள் கடலில் மிதந்துகொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் கடற்படையினர் மீட்டெடுத்தனர்.
மொத்தமாக 25 அகதிகள் நேற்றைய இரவில் மீட்கப்பட்டனர்.