வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ரஷ்ய வீரர்கள்

21 சித்திரை 2025 திங்கள் 03:26 | பார்வைகள் : 114
ரஷ்யாவின் சோயுஸ் எம்.எஸ்.26 விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற 3 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
ரஷ்ய விண்வெளி வீரர்களான அலெக்ஸி ஒவ்சினின், இவான் வாக்னர் மற்றும் நாசாவின் மூத்த விஞ்ஞானியான டொனால்ட் பெடிட் ஆகியோர் விண்வெளிப்பயணத்தை நிறைவு செய்து கஜகஸ்தானில் தரையிறங்கினர்.
இது குறித்த வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
இந்த மூவர்அடங்கிய குழு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 மாத ஆய்வை முடித்துள்ளது.