கடலில் காணாமற்போன சிறுவன் - உடலம் மீட்பு!!

21 சித்திரை 2025 திங்கள் 20:42 | பார்வைகள் : 410
பல்லவா லு-புளொட் (PALAVAS-LES-FLOTS) இல் நேற்று 20ம் திகதி கடலில் ஒரு 13 வயதுச சிறுவனைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டவுடன் பாரிய மீட்புப் படையினர் தேடுதல் வேடடையில் இறங்கியிருந்தனர்.
இந்தச் சிறுவன் நேற்று 12h15 அளவில் பல்லவா லு-புளொட் கடல் ஆரம்பத்தில் 2 மீற்றர் தொலைவில் நின்றிருந்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் காணாமற்போயிருந்துள்ளார்.
பலத்த தேடுதலின் பின்னர் இன்று உயிரற்ற உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உடலம் இந்தச் சிறுவனுடையது எனச் சந்தேகிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடல் கொஞ்சம் மூர்க்கத்தனமானது எனவும் தெவிக்கப்பட்டுள்ளது.