சுற்றுப்புறச்சூழல் கட்சி இன்னமுமும் பழமைவாதிகளா? - மதச்சார்பின்மையின் வரலாறு -

22 சித்திரை 2025 செவ்வாய் 10:57 | பார்வைகள் : 337
சுற்றுப்புறச்சூழல் கட்சியின் (Ecologistes) தலைவி, அதாவது தேசிய சுற்றுப்புறச்சூழல் கட்சியின் தேசியச் செயலாளர் மிகவும் பழமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது 88 வயது வயதில் இயற்கையெய்திய போப்பாண்டவர் பிரோன்சுவாவிற்குத் தனது அஞ்சலியைச் செலுத்தி ய தேசிய சுற்றுப்புறச்சூழல் கட்சியின் தலைவி மரின் தொந்தலே (Marine Tondelie) தேவாலயங்கள் இன்னமும் ஆழமாக வேலை செய்து தொலைநோக்கில் ஓரினச் சேர்க்கையாளர்களைத் தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஓரினத் திருமணங்களை ஐரோப்பிய அரசாங்கங்களே ஏற்று அங்கீகரித்து இருக்கும் நிலையில், சட்டத்திற்குப் புறம்பாக, அரசாங்கத்தையும் தேவாலயங்களைப் பிரித்துள்ள மதச்சார்பற்ற அரசின் laïcité தத்துவத்தை இவர் புறக்கணித்துள்ளார்.
1832 இல் பிறந்த Jules Ferry அமைச்சராக இருந்தபோது பிரேரிக்கப்பட்டு, பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தேவாலயங்களையும் அரசையும் பிரித்து முழுமையாக laïcité நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் நவீன வடிவத்தை இன்னமும் சீர்மைப்படுத்திய பெருமை நிக்கோலா சார்க்கோசியைச் சாரும்.