ட்ராம் கொலையாளிகள்!!

23 சித்திரை 2025 புதன் 11:01 | பார்வைகள் : 657
கடந்த 15ம் திகதி டராம் T3B இல் போர்த்து பந்தனில் (Porte de Pantin,) உயிரற்ற நிலையில் ஒருவர் கண்nடுக்கப்பட்டிருந்தார்.
15ம் திகதி காலை 6 மணியளவில் T3B ட்ராம் அணியில் ஒருவர் உயிருக்குப் பேராடிய நிலையில் இருந்துள்ளார். அவசர முதலுதவிப் படையினர் வருவதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான விசாரணையில் அதே நாள் காலை 8 மணிக்கு, சோமாலியாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர் விசாரணையில் இது ஒரு கொலை எனவும், அந்த நபரிடம் அதீத வன்முறையில் இவர்கள் நடந்து கொண்டதாகவும் இறுதியில் கொலை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த இரண்டு சோமாலியா நாட்டினரும் இன்று நீதிவிசாரணைக்குடுத்தப்பட்டு சிiயில் அடைக்கப்பட்டுள்ளனர்.