Paristamil Navigation Paristamil advert login

Normandie மருத்துவமனையில் ட்ரோன்களின் பாவனை அதிகரிப்பு!

Normandie மருத்துவமனையில் ட்ரோன்களின் பாவனை அதிகரிப்பு!

6 சித்திரை 2025 ஞாயிறு 05:56 | பார்வைகள் : 1247


நார்மண்டியில், மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகளை கொண்டு செல்ல ட்ரோன்களைப் பயன்படுத்தப் படுகிறது. ஆய்வகத்தில் 1.5 கிலோ எடை வரம்புக்குள் பொட்டலங்கள் என்று Coutances -Normandie மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சுகாதார மேலாளர் க்வெனால் லெஹவுசெல் (Gwenaëlle Lehoussel) விளக்கினார்.

மருந்துகள் மற்றும் இரத்த மாதிரிகள் ட்ரோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட பின் ட்ரோன் centre à Rouen (Seine-Maritime) இல் இருந்து தானாகவே இயக்கப்படும். ட்ரோன் பயணம் முழுமையான பாதுகாப்போடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாதனம் மணிக்கு 120 கிமீ வேகத்தில் பறக்கும். இந்த செயல்பாட்டின் மூலம் 30 டன்களுக்கும் அதிகமான CO2 ஐ சேமிக்க முடியும் என்று எதிர்பார்க்கலாம் ," என்று செயிண்ட்-லோ மற்றும் கூடன்சஸ் (Saint-Lô et Coutances) மருத்துவமனை துணை இயக்குநர் (Éric Vernier) எரிக் வெர்னியர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்