Paristamil Navigation Paristamil advert login

மாசுக்கட்டுப்பாட்டு வில்லைகள் நீக்கப்படுமா?

மாசுக்கட்டுப்பாட்டு வில்லைகள் நீக்கப்படுமா?

8 சித்திரை 2025 செவ்வாய் 10:18 | பார்வைகள் : 2932


வாகனங்களின் மாசுக்கட்டுப்பாடு தர வில்லைகளான crit air  வில்லைகளின் அடிப்படையில் பல வாகனங்கள் பல பெரும் நகரங்களில் தடை செய்ப்பட்டு வந்துள்ளன.

இதனால் பலர் பெருநகரங்களில் தங்களது வாகனத்தைச செலுத்த முடியாது போயினர்.

மரின் லூப்பனிப் தேசியப் பேரணிக் கட்சியான RN (Rassemblement national) பாராளுமன்றத்தில் இந்த வில்லைகளை இரத்துச் செய்யமாறு கேரிக்கை விடுத்ததையடுத்து, பல கட்சிகள் இந்தக் கோரிக்கையினை வலுப்படுத்தி உள்ளனர்.

இதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை, பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதமும் வாக்கெடுப்பும் நிகழ உள்ளன.

இது நீக்கப்படுவதற்கான பாரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ஆளும் மக்ரோன் கட்சி இதனை நீக்குவது மாசடைவால் பலர் இறக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இன்று பரிசின் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயின் நச்சுத் தன்மை, இதைவிடக் கொடியதாக பலரின் மூச்சுத் திணறலிற்குக் காரணமாக அமைய உள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்