பரிசில் இருந்து லண்டனுக்கு புதிய தொடருந்து சேவை!!

8 சித்திரை 2025 செவ்வாய் 13:36 | பார்வைகள் : 7190
பரிசில் இருந்து லண்டனுக்கு புதிய தொடருந்து நிறுவனம் ஒன்று சேவைகளை இயக்க உள்ளது.
இத்தாலியில் போக்குவரத்து சேவைகளை வழங்கும் Ferrovie dello Stato எனும் நிறுவனமே இந்த புதிய பரிஸ்-லண்டன் சேவைகளை வழங்க உள்ளது. வரும் 2029 ஆம் ஆண்டில் சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பல பில்லியன் யூரோக்களை முதலிட்டுள்ளது. குறித்த நிறுவனம் ஏற்கனவே சேவையில் உள்ள Evolyn நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து சேவைகளை வழங்க உள்ளது.
இத்தாலி-பிரான்ஸ் இடையே பயணிக்கும் Frecciarossa தொடருந்து நிறுவனம் போன்று அதிவேக சேவையாக இது அமைந்திருக்கும் எனவும், இது யூரோ சுரங்கப்பாதை வழியாக (le tunnel sous la Manche) சேவைகளை இயக்கும் ஐந்தாவது நிறுவனமாகும்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025